விடியல்

வசிக்க இடமில்லை
மடமும் தேவையில்லை
உன் மனம் போதும்
அலைபாய்ந்து கொண்டிருக்கும்
என் உயிரை
ஆசுவாசப்படுத்த!
உன்னுடன் கலந்து
உயிரைக் கொடுக்க முடியாமல் போனாலும் !!
என் சுவாசக் காற்று
உன்னையே ஸ்பரிசிக்கும்
தினமும்
புத்தம் புது விடியலை
எதிர்பார்த்து!

எழுதியவர் : ப்ரியா (2-Aug-12, 6:16 pm)
சேர்த்தது : priya sakthivel
பார்வை : 160

மேலே