விடியல்
வசிக்க இடமில்லை
மடமும் தேவையில்லை
உன் மனம் போதும்
அலைபாய்ந்து கொண்டிருக்கும்
என் உயிரை
ஆசுவாசப்படுத்த!
உன்னுடன் கலந்து
உயிரைக் கொடுக்க முடியாமல் போனாலும் !!
என் சுவாசக் காற்று
உன்னையே ஸ்பரிசிக்கும்
தினமும்
புத்தம் புது விடியலை
எதிர்பார்த்து!