வழியெல்லாம் வலிகள் !

நான் வரைந்து
வைத்த வண்ணக் கனவுகளை
திருடப்பார்க்கிறது விதி !
எதிர்கொண்ட, கொள்கிற
இடர்கள் ஏராளம் ஏராளம்,
வெறி கொண்டவனுக்கு
வெற்றி அடிமையாகும்
என்ற எவனோ ஒருவனின்
வாக்கை கேட்டு
பயணிக்கிறேன் !
எரிபொருள் முக்கியமல்ல,
என் பயணம் முக்கியம்
எதிர்கொண்ட
அவமானங்கள்
எனைச்செலுத்தும்
எரிபொருளாய் !
தலையணையில்
இறக்கி வைத்த
கண்ணீர் துளிகள்
கரைக்கத்துடிக்கின்றன,
இதயம்
இருப்பதாக
நம்பப்படும்
இறைவனின் இதயக்கதவுகளை !
போராடத்துணிந்தவனுக்கு
சமர்க்களம்
வசப்படும் !
நண்பர்கள் தோள்கொடுக்க,
வாள் வீச நான் தயார் !
- வினோதன்