காக்கிச்சட்டை
"வேலியே பயிரை மேய்ந்தால்..................................."
"காவல்காரனே களவேடுத்தால்................................"
"லஞ்சத்தை தடுப்பவனே அதை வாங்கினால்........"
"காப்பவனே கற்பழித்தால்.........................................."
எத்தனை தலைப்புகளில்
நீங்கள்
இருந்தும்
அவலத்தில்
உங்கள் அலுவலகம் நோக்கி
இன்றும் நகர்கின்றன
கால்கள்.
இன்னும் சத்தியப்பிரமாணத்தை
போதையில் செய்யாது
சுய நினைவில் செய்த
காக்கிச்சட்டைகள்
உள்ளனவே......................