கல்லறையிலும் நந்தவன மலருடன் உனக்காக 555

பெண்ணே.....

சுட்டெரிக்கும் சூரியனுக்கு
குடை பிடித்து...

சுற்றி வந்தேன்
உன் நிழலாக...

பௌர்ணமி நிலவாக
இரவினில் உன் முகம்
பார்க்க வந்தேன்...

வாடாத மலராக இருந்து
வாடி இருந்தேன்...

உன்னை காண
நந்தவன மலராக...

என் உலகம் நீ என்று
சுற்றி வந்தேன்...

உலகம் இல்லை என்றாய்...

உயிரென நேசித்த என்னை
சந்தேகித்தாய்...

உடல் மட்டும் இரண்டு
உயிர் ஒன்றுதான்...

நேசம் கொண்ட காதல்
மாறுவதில்லை...

உனக்கென்று இருக்கும்
என்னை மறந்து போனாய்...

என் விழிகளில் நீர் சூழ
கலங்கி நிற்கிறேன்...

நான் இருக்கும்வரை
உண்மை இல்லை என்றாய்...

என் காதலை...

நான் இறந்த பின்பாவது நீ
உணர்ந்துகொள்...

என் காதலை...

நீ உணரும் ஒருநாள் வரும்
என்னையும் என் காதலையும்...

நீ என்னை மறந்தாலும்
கொடுத்துவிடாதே உன் இதயத்தை...

நான்கு அறைகளில்
ஒன்று தருவாயா எனக்கு...?

நீ என்னயும் என் காதலையும்
உணரும் வரை...

காத்திருப்பேன் கல்லறையில்
உனக்காக அல்ல...

நீ உணர்வாய் என்று...

நம்பிக்கையில்...

என்னை நீ மறந்தபோதும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (11-Aug-12, 8:12 pm)
பார்வை : 294

மேலே