என் மனம் ஒரு கண்ணாடி
என் மனம்
ஒரு கண்ணாடி
நீ
புன்னகைத்தால் என்
மனமும் புன்னகைக்கிறது
நீ
முகம் வாடினால்
என் மனதும்
வாடிப் போகிறது
உன் கூந்தல்
அலைப் பாய்ந்தால்
என் மனதும்
அலைபாய்கிறது
உன் கொலுசொலி
கேட்டால் என்
மனதும்
தாளம் போடுகிறது
உனக்கு சந்தேகமென்றால்
என் மனதை வந்து
பார் அது உன்னையே
பிரதிபலிக்கும்
ஞாபகத்தில் வை
என் மனம்
ஒரு கண்ணாடி
நீ காதல் சொன்னால்
அதுவும் காதல்
சொல்லும்
...நீ
கல்லெறிந்தால்
சுக்குநூறாய்
உடைந்து போகும்