கழுதைகளா நாங்கள்?

சுகமென்ற போர்வையிலே
நமக்கென்ற ஆவலிலே,
"சுதந்திர" மூட்டை
சுமக்கும்
கழுதைகளா நாங்கள்?

சுகங் காட்டி
வதஞ்செய்யும்
வஞ்சகரின் சாட்டைகளை,
வெஞ்சினங்கொண்டு
வேரறக்கும்
வேங்கையன்றோ நாங்கள்?

தடையுடைத்து
படையெடுத்த
காலமெல்லாம் போச்சு,
கவி தொடுத்து
சிரங்குவிப்போம்
சர்வதேசம் நோக்கி...

தூங்குகின்ற தமிழன்னை
விழித்திருக்கும் போது,
சாமகானம் நாம் இசைப்போம்
சண்டாளன் சிரம் சாய்த்து...

எழுதியவர் : S.Raguvaran (6-Sep-12, 7:26 pm)
பார்வை : 187

மேலே