மகளின் விந்தை

துயரங்களின் விளிம்புகளில்
சோர்ந்து நான் இருக்கையிலே
மடி சாயும் மகள் பேச்சு
மாயங்கள் செய்திடுமே....

துடுக்கான பேச்சுகளில்
துயரங்கள் பறந்தோடும்,
தேன் சொட்டும் வார்த்தைகளில்
தொல்லைகளும் தொலைந்து போகும்...

வரண்டு கிடந்த பாலையிலே
திரண்டு வந்த மழையாக
இறைவன் தந்த மழலையவள்
இகமெனக்கு சொர்க்கமாக்க....

எழுதியவர் : S.Raguvaran (6-Sep-12, 9:33 pm)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 231

மேலே