!!!!!!!!!! இது போதும் எனக்கு !!!!!!!!!!

என் கனவுலகில்
என்றுமே நீதான் நாயகன்
தனி ஒரு உலகம்
தனிமையில் நான்


புன்னகையாய்ப் பூக்கின்ற
புது உறவே – என்னுள்
புனிதமாய்ப் புகுந்து
பூபாளம் பாடும் என் உறவே


விதி எனும் விளையாட்டில்
விளையாடும் என்னைத்
தோற்கடிக்க பலர்
எங்கிருந்து வந்தாயோ
எனை வெல்ல வைக்க
நீ தோற்றுவிட்டாய்


கனத்த இதயம் கரைய
நினைத்த வலிகள் முடிய
முற்றுப் புள்ளியாய்
முடிவுகளோடு நிற்கின்றாய்


நிழலாய்த் தொடரும் நீ
நேரில் வரவேண்டாம்
உலவுகின்ற நினைவுகள்
உறைந்துவிடும்


பார்த்த மறுகணம்
பதுங்கியிருக்கும் உயிரது
பிரிந்துவிடும் – நீ
என்னை நினைத்து
கனவோடு வாழநேர்ந்துவிடும்


தேடலில் நிஜம் காண
இனி விருப்பம் இல்லை – என்
பாடலில் என்றுமே தொடரட்டும்
உன் அன்புத்தொல்லை


பூக்களை ரசித்துவிட
கொள்ளை விருப்பம்
என் கூந்தல் கொண்ட
ஏக்கம் மறைக்கவும்
கொள்ளை விருப்பம்


சிரிக்கின்ற நான் சிதைகின்றேன்
சோகங்கள் என்னுள் புதைக்கின்றேன்
கனவுகள் போதும் எனக்கு - உன்
காதலதும் போதும் எனக்கு


என் காதல் தேவனே
கல்லாகிப்போன இதயமது
நில்லாமல் துடிக்கின்றது
சொல்லாமல் தொலைகின்றது


நம் அழகான காதலுக்கு
வடிவமது வேண்டாம்
என் உள்ளத்திற்கு
கடிவாளமும் வேண்டாம் !!!

எழுதியவர் : pulamiambika (12-Sep-12, 1:57 am)
பார்வை : 229

மேலே