உறக்கம்

உறக்கமில்லாத விழிகளில் எத்தனை
நினைவோட்டங்கள் ;
எளிதில் மறக்க முடியாத
எதிபார்ப்புகள் நிறைவுறாத நினைவுகள்
எத்தனையோ
நாட்கள் நீளும் இரவில்
கடிகாரத்தின் சிலுங்களுக்கேற்ப ஒளிகின்றன ;

ஆழ்மனதில் தோன்றும் பயமும்
அதனால் கொண்ட நடுக்கமும்
இரவில்
கோரபற்கள் தெரியக் குரைக்கும் நாயினைப் போல் பயமுறுத்துக்கின்றன ;

நேற்றைய தோல்விகளும்
நாளைய சிக்கல்களும்
என் கழுத்தில் சுருக்கு போடுகின்றன ;

ஆக
மனதின் எண்ணகளும் அதன் பயமும்
இரவில்
சுற்றும் மின்விசிறியை போன்று சுற்றுகின்றன ..

இவைகளின் நடுவில் உறக்கம்
இன்று ஏற்படும் மின்வெட்டு போல்
வந்துசெல்லுகிறது

எழுதியவர் : harihari (12-Sep-12, 6:23 am)
பார்வை : 162

மேலே