பாசம்
அன்பு என்ற அஸ்திரம்
கொண்டு நட்பு என்ற பெயரில்
நம் கண்ணில் நீரை
வரவைப்பது அல்ல பாசம் ...
புரிதல் என்ற உணர்வோடு
நம் உணர்வுகளை மதித்து
நம் மீது கொண்ட நேசத்தை
தன் உயிரினில் புதைத்து
நாம் மகிழ்ந்திட தம்
கண்ணில் கண்ணீரை
சுரக்கும் மனதில் மட்டுமே
வாழும் உண்மையான பாசம்
என்றும்.. என்றென்றும்... ...

