வாரீர் நங்கையரே!

பெண் அடக்கப்படுவதற்கும்
ஆழப்படுவதற்கும் என்றால்
ஆண்மைத்தீ அணையட்டும்
எங்கும் ஆன்மீகம்
பெருகட்டும்,
ஆணாதிக்கம் அழியட்டும்,
பெண் சமத்துவம் பூக்கட்டும்
முரட்டுக் கரங்களின்
பிடிகள் உதறி
வாரீர் நங்கையரே!
புது வாழ்வு படைப்போம்,
பாரதியாய் பரிணமிப்போம்
கண்ணகியாய் தீ வளர்ப்போம் ....