நான்

எனக்கு தெரியும்
இப்படியெல்லாம் நடக்குமென்று
என கடைசியில் கூறுபவனல்ல
நான்.....
முதலில் எச்சரிப்பேன்
பிறகு எடுத்துரைப்பேன்
மீறினால் அமைதியாவேன்
பட்டு தெளிந்து
உணர்ந்து முடித்து
வரும்போது வாரியணைப்பேன்
காயப்பட்ட நெஞ்சுக்கு
மகிழ்ச்சி மருந்தளிப்பேன்
நான்...

எழுதியவர் : த.நாகலிங்கம் (24-Sep-12, 2:10 pm)
Tanglish : naan
பார்வை : 172

மேலே