மழலையின் சிவந்த கரங்கள்

வேலைக்கு போன
அம்மா வீடு திரும்ப
நேரம் ஆகி விட்டது

பசியால் பாப்பா தம்பி
அழ ஆரம்பித்துவிட்டான்
தம் பிஞ்சு கரங்கள்
இரண்டையும் ஒன்றாய் சேர்த்து
முரசென தட்டி தட்டி
சத்தம் எழுப்பி
தம்பி பாப்பாவின்
அழுகுரல் சத்தத்தை நிறுத்தினான்

உள்ளங்கை இரண்டும் பிறர்
உள்ளம் கணக்கும்
ரத்த சிவப்பு .

இருப்பினும்
தம்பி பாப்பாவின்
அழுகையை நிறுத்திய
பேரானந்தம் அவன்
முகத்தில் துள்ளி விளையாடியது .

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (29-Sep-12, 7:46 pm)
பார்வை : 144

மேலே