காதல் வலி
என்னவென்று என் மனதைச் சொல்ல,
என்னவள் தான் தடை என் காதல் வெல்ல....
அவளைக் காணாமல் என் நட்களிங்கு செல்ல,
எவருமில்லை அவ்விடத்தில் என் தனிமையைக் கொல்ல....
மாறவில்லை அவள் மனம் இன்னமும்,
என்னை வெறுத்து நிற்கும் அந்த எண்ணமும்....
மாறிவிடு என் மனமே,
அவள் மனதில் ஈரம் துளியும் இல்லை....
இரவல் என்பது ஒருமுறை தான்,
மறு இரவல் கேட்க மானம் தடுக்குதே....
நீ ஏற்க மறுத்தால் மனம் வாடுதே,
இருந்த போதும், நெஞ்சம் உன்னை நாடுதே....
இதயமொன்று கொண்டேன்,
நீ உதறிச் செல்ல கண்டேன்....
அதில் உதிரம் வழிந்த போதும்,
உன்னை மறந்து போக மாட்டேன்....
கரையோரம் தேடித் பார்க்கிறேன்,
கானல் நீரில் மீன்கள் பிடிக்க....
என்னை இரையாக்கித் தேடித் பார்க்கிறேன்,
ஈரம் மிஞ்சியது கண்களில் மட்டும்....
உறக்கம் கண்ணைத் தழுவும் நேரம்,
உந்தன் கனவுகள் இமையாய் மூடும்....
உறக்கம் தெளிந்த விடியற் பொழுதும்,
எந்தன் விழிகள் உன்னைத் தேடும்....
குறுஞ்செய்தி மூலம் காதல் வளர்த்தேன்,
அலை பேசி மூலம் அவளை அடைந்தேன்....
அதனால் தான் என்னவோ,
குறுங்காலம் மட்டும் பழகிச் சென்றால்,
அலைந்து அலைந்து தேயச் செய்தால்....
கவிதை ஆயிரம் வடித்த போதும்....
காதல் வலி தான்,
என் கவிதை மொழியாம்....!!!!