உயிரே

உயிரே!
விலகாதே
பழகிய இதயத்துக்கு புரியாதே
தனிமையின் வேதனை தராதே

சேர்ந்து ரசித்த கடல் அலைகள்
நினைவலைகளாய் மாறி
என் இமை நனைக்க வைத்தாய் !

நம்மோடு கை கோர்த்த
சாலைகள்
என்னோடு பயணிக்க
மறுக்கிறது!

இரவறியும் என் கண்ணீரை
பகல் அறியும் என் நிழலை
உரிமையின் போராட்டம்
இனி உச்சக்கட்டம் !

சொந்தம் என நினைத்தது
தூரம் போனது
சிரிப்பின் இசைக்கு
அழுகை ,குரல் தந்தது !

வாழ்கையே நிழல் போல் ஆனது
கருமையும் ஒரு வண்ணம் தானே !
என தேற்றி கொண்டேன் .

எழுதியவர் : ஷெரில் (5-Oct-12, 12:04 pm)
Tanglish : uyire
பார்வை : 144

மேலே