கோபம் கொள்ளாதே!

உனக்கு
கடிதங்கள்
எழுதவில்லை என்று
என் மீது
கோபம் கொள்ளாதே!

எழுதி முடித்து
முகவரியில்
உன் பெயர்
எழுதியவுடனே
கடிதங்கள் யாவும்
பட்டாம்பூச்சிகளாக
மாறி
பறந்துவிடுகின்றன.


எழுதியவர் : சுதந்திரா (16-Oct-10, 8:56 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 516

மேலே