காதலே கற்பு

காதலின் பிறப்பிடம் இறைவன்,
கற்பு, அன்புக்காதலிடம்தான், கொள்,
கைகொண்ட துணையுடனில்லை.

அப்படியில்லையெனில் அது
கைமாறிக்கொண்டே இருக்கலாம்.
காதல், களம் மாறிடுவதில்லை.

உயிர்த்தன்மை கொண்ட காதல்
ஒருபோதும் அழிவதில்லை. அஃது
கடலினைப்போல அமைதியானது.

மாறி உழன்றிடும் அலைகள்போல்
உருவங்கள் மாறிடலாம் துணையிடம்.
கலவிசுகம் உடல் கொள்ளுதற்க்காய்.

மழை பொய்த்த மேகம் செல்லும்.
கொண்டுசெல்லுமே அழிந்த கற்பை,
காதல்தன் கலவித் துணையிடம்.

எழுதியவர் : thee (11-Oct-12, 12:53 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 154

மேலே