இதய கதவு
தானாக தாளிட்டுக்கொண்டது
என் இதயக்கதவு!
நீ உள்ளே நுழைந்ததும்
எந்தப்பெண்ணையும்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை நான்!
என்னை
வெறுத்து நீ வெளியே சென்றாலும்
வேறு பெண்ணை
விரும்பமாட்டேன்!
காரணம் - நீ
வெளியேறிய மறுகணம் - நான்
உயிரிழந்த பிணம்!