சச்சினுக்கு....ஆஸியின் உயர் விருதுக்கு மேத்யு ஹைடன் எதிர்ப்பு - சரியா தவறா..? ஈழதேசம் பார்வையில்..!
சச்சின் டெண்டுல்கர் என்ற இந்திய ஹீரோவுக்கு ஆஸியின் உயரிய விருதான ' ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா ' என்ற விருதை ஆஸியின் பிரதமர் ஜூலியா கில்லார்ட் அவர்கள் இந்திய பயணத்திலேயே அறிவித்துள்ளார். இந்திய அரசும் அதாவது காங் அரசும், சங் பரிவார் கூட்டமும் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஆனந்த மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். மாறாக ஆஸியிலோ எம்.பி ராப் ஆஷூட் அறிவிப்பு வந்தவுடனேயே தனது எதிர்ப்பை தெரிவித்து விட்டார். தற்பொழுது மாத்யு ஹைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆஸியின் முன்னாள் தொடக்க துடுப்பு ஆட்டாக்காரர்.
ஆமாம் ஏன் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருதை ஆஸ்திரேலிய பிரதமர் வழங்குகிறார்.? இந்திய அரசையும் இந்தியாவின் ஏனைய அரசியல்வாதிகளையும் பின் எவ்வாறு குசிப்படுத்துவது..?ஆறு ஏழு ஒப்பந்தங்களை போட்டுள்ளது இந்திய அரசு ஆஸ்திரேலியா அரசுடன். எல்லாம் பணத்தை மூட்டை மூட்டையாக அள்ளிக்கொண்டு போகும் ஒப்பந்தங்கள். அதில் ஒன்று யுரேனியம். யுரேனியத்தை இந்திய அரசிடம் விற்கப்போகிறது ஆஸியின் அரசு. இந்தியாவில் அமையப் போகும் ஏராளமான அணு உலைகளுக்கு என்று.
இந்த விருதை ஏற்கனவே ஒரு ஆறு வெளிநாட்டு வீரர்களுக்கு கொடுத்துள்ளது ஆஸியின் அரசு. அப்பொழுது கொடுக்கப்பட்ட விருதெல்லாம் உண்மையிலேயே கொடுக்கப்பட்ட விருதும் கிடையாது. தங்கள் நாடு உலக அரங்கில் மிகப் பெருந்தன்மையான நாடு என்று பீற்றிக் கொள்ளவே அன்றி வேறல்ல. கிளைவ் லாயிடு, சோபர்ஸ் என்று தொடக்கி தற்பொழுது டெண்டுல்கருக்கு கொடுக்க முற்பட்டுள்ளன என்று கருத முடியாது. சச்சினுக்கு கொடுக்கும் விருதுக்குப் பின்னால் டன் டன் கணக்கான மூட்டைகளில் பணம் நிரம்பி வழியும்.
சரியாக 89 - ன் இறுதிகளில் பாக்குடன் விளையாட துவங்கிய சச்சின் டெண்டுல்கர் 2010 - ம் ஆண்டு வரை இந்தியாவின் அசுர வளர்ச்சிக்கு மிக உந்து சக்தியாக இருந்தார் என்று கருதலாமா..? சச்சின் விளையாட துவங்கிய காலத்தில் கிரிக்கெட் உலகத்தில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களே உலகப் புகழ் பெற்று இருந்தனர்.
மாறாக, இந்திய விளையாட்டு ரசிகன் எந்த ஒரு விளையாட்டையும் ரசிக்க முடியாமல் பெரும் சோதனையான சுங்கச் சாவடியில் பெரும் முழி முழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். கிரிக்கெட் விளையாட்டை பெரும் கோமான்களும், படித்த மேல்தட்டு வர்க்கமும் ரேடியோ பெட்டியை காதில் வைத்துக்கொண்டு, கோமாளித்தனங்களில் திளைத்திருந்த காலம் அது. இந்தியா முழுதும் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அல்லது இரண்டு மூன்று லட்சங்களில் தான் ரசிகர்கள் இருந்தார்கள். ( இது ஒரு நீண்ட கட்டுரையாக வந்து விடும் என்பதால் முக்கிய பாயிண்டுக்கு வந்து விடுவோம்.) தற்பொழுது என்னடா என்றால்... வீட்டில் எந்த வேலையும் இல்லாத பெரிசுகள் கூட, அட..என்னப்பா இவனுக்கு அடிக்கவே தெரியல்ல..இவனை போய் டீமில் வைத்து வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் டி.வி.யில்..? ஒருவேளை காசை வாங்கிக் கொண்டு சேர்த்திருப்பார்களோ..? நாடு எப்படி உருப்படும்..? என்று பேசும் வார்த்தைகள் நமது காதுகளில் வந்து தானாகவே விழுகிறது.
சச்சின் என்ற பிம்பத்தின் மூலம், அணைத்து மாநில இளைஞர்கள் காயடிக்கப்பட்டாகள். வேலை, கல்வி,வறுமை, அடிப்படை உரிமையான பொது சுகாதாரம், மின்சாரம், வீடு, மாநில உரிமைகள், பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் கொள்ளைகள், இவையெல்லாம் போக இருக்கும் அணைத்து வித மாநில கட்சிகளும் இந்திய தேசியத்தை நோக்கி தள்ளப்பட்டன, அவ்வாறு மாற முடியாத கட்சிகள் உடைக்கப்பட்டன. இன்று இந்தியாவில் மாநில உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் எந்த ஒரு கட்சிகளும் கிடையாது. அவ்வாறு இருக்கும் கட்சிகளும் இந்திய தேசியத்தை நோக்கி மாற்றப்பட்டன. இவற்றுக்கெல்லாம் ஒரு மாபெரும் மாயா ஜால, மந்திரக் கோல் இல்லாத பெரும் ஒளிவெள்ளம் தான் சச்சின் டெண்டுல்கர் என்ற விளையாட்டு வீரர் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
அப்துல் கலாம் என்ற கட்டுடைப்பு எவ்வாறு தேவைப்படுகிறதோ..அதுபோன்றே சச்சின் என்ற கட்டுடைப்பும் தேவைப்பட்டன. ஆனால் இரண்டுக்கும் காலம் கடந்து விட்டது. யார் இந்த கட்டமைத்தலை உருவாக்கினார்களோ..? அவர்களே தூக்கி எறியும் நிலையில் உள்ளார்கள். ஆனால் காலம் கடந்து அறிவுசார் உலகம் பேசிக் கொண்டிருக்கிறது கட்டுடைத்தல் பற்றி. எனவே சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்காமல் பின் யாருக்கு கொடுப்பார்கள் பாரத ரத்னா விருதும்..?ஆஸ்திரேலியாவின் உயர் விருதும்..? மேத்யு ஹைடனும். ஆஸியின் எம்.பி.ராப் ஆஸுட் போன்றவர்கள் கூறுவதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்..? என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.