மின்வெட்டு
மணிக்கொருமுறை பார்வை இழப்போம் ...
என்றா நினைத்தோம்
நாம்
நோயோ பேயோ அல்ல இது
விரட்டி விடுவதற்கு .......
எங்களின்
வாழ்வாதாரத்தை பறித்து
கொசுக்களுக்கு பசியில்லா வாழ்வளிக்கும் புதுமையான அரசே ...
எங்களையும்
குருதி வழங்கும்
கொடை வள்ளலாய் தான்
மாற்றி விட்டாய் .....
மாற்றம் ஒன்றே மாறாதது
என்றிருந்த எங்களுக்குள்
குழப்பமும் தீர்வும்
தந்துவிட்டாய் -இந்த
மின்வெட்டும் மாறாதென்று....