ஓர் அழகியின் காதல்.

அவளல்ல நான் இன்று.
அவனோடு மட்டும்தான் என்று.

அந்த இரவோடு இரவாக இறந்திடுவேன்.
மறுநாள் புதுப்பெண்ணை துயில் அயர்வேன்.

தினம் தினம் மரிக்கின்றேன்
அவர்கட்கு உண்மையாய் உடல் கொடுக்க.

என் குடல் பசியை ஆற்றிட
பலர் உடல் பசியை தீர்திடுவேன்.

அனைவரும் வந்துவிட்டனர் என் வாசல்(ம்) தேடி
அவன் மட்டும் வரவில்லை என்னை நாடி.

பன்மையாய் பலர் என்னை பகிர்ந்துண்ணும்போதும்,

உண்மையாய் நான் உன்னை
உளமார நேசிக்க,

எண்ணமாய் நீ என்னில்
இதமாக பயணிக்க,

அந்நிலையில் என் சொல்வேன்
என்நிலையை உன்னிடத்தில்

உடல் விற்றேன் பலருக்கு.
உள்ளம் உன்னை தவிர யாருக்கு?

நீ எந்தன் கைகள் பற்றும் முன்னே
நோய் எந்தன் உடலை தொற்றியதே!

உன் நினையோடு நான்
உயுரோடு சமாதியாய்.

அழகியின் காதலில் அழகில்லையா?
அழகிக்கு காதல் அழகில்லையா?

எழுதியவர் : hujja (24-Oct-12, 10:58 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 192

மேலே