!!!=( கற்பினியின் கண்ணீர்த்துளிகள் )=!!!!

மசக்கையில் உள்ளபோது
மாங்காய்கள் வேண்டுமென்றால்
மாந்தோப்பில் நான் புகுந்து
மாங்காய்கள் திருடி உண்பேன்...

சலித்திடாமல் உண்ணுகிறேன்
சாம்பல் மட்டும் போதுமென்று.
சங்கடங்கள் ஏதுமில்லை - என்
சந்திரனை சுமைக்கையிலே.

கையிரண்டும் இடுப்பில்வைத்து
காலடிகள் எடுத்துவைக்க
கண்ணீரோடு பட்ட பாடு
கடவுளுக்கும் தெரியாதே....!

ஒற்றைக்கதிரவன் உதிக்கும் முன்
ஓயாமல் உதைக்கிறான்...
ஓய்வின்றி புரள்கிறான்-என்
ஓவியமாய் திகழ்கிறான்..!

பத்து மாதம் பாதுகாத்து
பத்திரமா பெற்றெடுத்து
பாலகனின் முகம் கண்டு
பவளமாய் நான் மின்னுகிறேன்..!

அவனுக்கோர் பெயர்ச்சூட்ட
அழகான பெயர்த்தேடி
ஆங்காங்கே சேகரித்து
அழகான பெயர் வைத்தேன்.

எழுதியவர் : ராஜ்கமல் (4-Nov-12, 5:41 pm)
பார்வை : 168

மேலே