ஏழை விவசாயி ...

என்ன தப்பு சைதோமுங்க வருமையில பொறந்தோமுங்க!
கலப்பை புடிச்சொமே கால் வயிறு நிறையளையே!

வெட்டி எடுத்தாலும் வேட்டி கூட வாங்களையே!

மானம் இழந்த பின்னும் கூட மாத வட்டி கட்டளையே!

என்ன தப்பு சைதோமுங்க வருமையில பொறந்தோமுங்க!

நெல்லு வெளைஞ்சதுல நெஞ்சம் நிறையலையே!

பருத்தி போட்டதுல பாதி கூட விளையுலையே!

கரும்பு கூட போட்டோமே கரை தாண்ட முடியலையே !

என்ன தப்பு சைதோமுங்க வருமையில பொறந்தோமுங்க!

மண் சோறு தின்ன புள்ள நெல் சோறு கேக்கையில
- என் சாமி நீதான்னு மாறோடு தழுவிகிட்டோம் மனதார அழுது விட்டோம்!

என்ன தப்பு சைதோமுங்க வருமையில பொறந்தோமுங்க!

எழுதியவர் : சந்துரு பிரபாகரன்(மெல்லி (6-Nov-12, 1:25 am)
பார்வை : 353

மேலே