நட்புக்கு ஒரு கவிதை ...!
பூப்பூக்கும் வாழ்க்கையின்
ஒரு அங்கம் ...
அன்பின் மொட்டு அரும்பிய
அடுத்த நொடிகளில்
மலரும் பூ ....
பூக்க ,
பருவகாலம் எதுவுமில்லை
வயது இதுவென கட்டுப்பாடில்லை
ஆண் பெண் பேதமில்லை
ஆதாயம் வேண்டி எதுவுமில்லை
எதிர்பார்ப்பு என்று ஒன்றுமில்லை ...
நான் என்ற வார்த்தை இப்பயணத்திலில்லை
நாம் என்பதைத் தவிரவும் வேறு இல்லை
பொறாமைப் பார்வை விழிகளில் இல்லை
விகற்பமாவது ,
ஒருவரின் வெற்றி இருவரின் கண்ணில் ...
இருபதுக்கும் அறுபதுக்கும் பாலமாகும்
இன்னல்களை அழிக்க இனிதே கரம் சேரும்
உறவுகளுக்கும் ஒருபடி மேல்தான்
உலகிலேயே மிகப்பெரிய உறவுதான் ...!
நட்பின் அஞ்சல் கிடைக்கும் பட்சம்
நம்பிக்கைத் தளிர் உன்னில் பிறக்கும்
அடுத்த கணம் ,
முயற்சியின் பக்கம் உன் சகாப்தத்தில்
சாதனைத் தொகுப்புகள் உன் சரித்திரத்தில் ....
நட்பு ,
அன்பின் வழியே
ஒரு வழிபாடு
அனைவரோடும் ...!