எழுத்து.காம்

இது எங்களின் நான்காம் சங்கம் !
அனுதினமும் அரங்கேற்றங்கள்,
நக்கீரர்கள் இங்கே கடைவரிசையில்..
தருமிகளின் கையில் பொன்முடிகள்..

தமிழோடு சேர்ந்து தமிழரையும் வளர்ப்பதால்,
அடுத்த நூற்றாண்டின் கரகோசங்களும் எமக்குத்தான்!!...
நாங்கள் பிழைகளைக் காணாது
பிள்ளைகளைக் காண்கிறோம்...
அனைவரும் தமிழ்தாயின் பிள்ளைகள்..

எழுத்து விதைகளைத் தூவி,
கருத்து மலர்களை பறித்து மகிழ்கிறோம்!
ஓலையுமில்லை,காகிதமில்லை..
இணையத்தின் வடிவில் இலக்கியம் செய்கிறோம்! ...

வருகின்ற தலைமுறைக்கு
வழி வகுத்து,வழி தந்து
இருக்கின்ற தலைமுறையின்
இன்பங்கள்,துன்பங்கள்
எடுத்து சொல்வதுதான் இலக்கியம்...
அதுவே எமது இலட்சியம்!!

எழுதியவர் : (28-Dec-12, 12:02 am)
பார்வை : 119

மேலே