புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அன்னை மடி
மறவா செல்வங்களாய்...
அன்பு ஒன்றே
அகத்தினில் கொண்டு...
நட்பாய் நலம்
மட்டுமே நாடி...
பகைமை பாராட்டும்
எண்ணம் மறந்து....
ஏழையின் கல்விக்கு
இயன்றதை ஈந்து...
சிகரம் நோக்கிய
நடை போட்டு...
எட்டாக்கனியையும்
இலகுவாய் எட்டி...
இனி வரும் காலமும்
இனியதொரு...
காலமாய் அமைய
வாழ்த்துகிறேன்...மகிழ்வுடன்...