இப்படி வெறுக்கிறாய் எனில்......

பாதி கேட்ட பாடல்
நெஞ்சோடு நிழலாடும் போதெல்லாம்
நினைவோடு வரும்
கேட்கத் தவறிய பாகம் போல....
நீ பேசிய வார்த்தைகள்
நெஞ்சில் நிழலாட....
நினைவில் வரும் ....
நீ பேசத் தவறிய வார்த்தைகள்.....
என்றோ பெய்த பெருமழைக்கு
இன்றைய சாட்சியாய்...
செவ்வானம் போல....
நம் கல்லூரி புகைப்படம்...
மீண்டும் ஒரு முறை
காதல் மழை தருமா......?
நம் கல்லூரி மேகம்....
பிரிகிற வேளையில்
கிளையோடு இல்லை சொல்லும்
சேதி என்னவாயிருக்கும்?
நீ சொன்னது போல.....
"உன்னை மிகவும் வெறுக்கிறேன்" என்பதாயிருக்குமோ?
கிளை தாங்கும் இலையின் தழும்பு போல....
உன் வார்த்தையின் தழும்புகள்....
தாங்கியே இருக்கிறேன்.....
"எனை எப்படி விரும்பியிருந்தால்..
இப்படி வேருத்திருப்பாய்...."
தழும்புகள் ஆறாமல்.....
எழுப்பிய படியே இருக்கிறது...
உன் மேலான
தீராக் காதல்......