அழுவதை நிறுத்தி நீ அண்டங்களை வென்றிடு

முதுகின் வியர்வையை சுவைத்தே பாரடா
உழைப்பின் சுவை அது உப்பெனப் புரியும்...!

தாய்ப்பாலில் சுரந்த தமிழ்வீரம் பருகியே
தன்மானம் காக்க தலை நிமிர்ந்த என் மகனே...!

அழுவதை நிறுத்தி நீ அண்டங்களை வென்றிடு
அடுத்த நொடி நமக்காக அழகாக சிரித்திடு......!

நம்பிக்கை இருந்தாலே நாளெல்லாம் திருநாளாம்..
நல்லதையே நீ எண்ணு...நம் வாழ்வு பூஞ்சோலை...!

காசு பணம் இருந்தாத்தான் கணக்கில்லா சந்தோசமா ?
கைகாலும் எதுக்கிருக்கு? கருத்தோடு உழைப்பதுக்கு.!

உழைத்துத்தான் பாருடா உன் சக்தி புரியுமடா....!
உன்னை நீ புரிந்து விட்டால் உண்மையில் நீ கடவுளடா.....!

உருவாக்கும் சக்தி உனக்குள்ளே நிறைஞ்சிருக்கு
உயர்ந்து நீ எழடா...! உன் நிழலில் உலகிருக்கு....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (5-Jan-13, 1:14 am)
பார்வை : 178

மேலே