பாலமுருகன் கணபதி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பாலமுருகன் கணபதி |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 13-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 3 |
வெள்ளைக்கார கூட்டமொன்றை
வேர்பிடுங்க வந்தது
வெல்லுகின்ற வழியை நமக்கு
சொல்லி அன்பை தந்தது
வில்லும் அம்பும் இன்றியிங்கு
வீறு கொண்டு நின்றது
வீழ்ச்சி யின்றி சூழ்ச்சியின்றி
வெற்றி பல கண்டது
கத்தி யின்றி விடுதலையை
பெற்ற வொன்றை போற்றுவோம்
யுத்த மின்றி அமைதியுடன்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்
எட்டுத்திக்கும் எழுந்து நிற்கும்
தேர்ந் தெடுத்த மந்திரம்
ஏழைக்குரலும் ஏற்றம் காணும்
காந்தியத்தில் சாத்தியம்...
இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப
வெள்ளைக்கார கூட்டமொன்றை
வேர்பிடுங்க வந்தது
வெல்லுகின்ற வழியை நமக்கு
சொல்லி அன்பை தந்தது
வில்லும் அம்பும் இன்றியிங்கு
வீறு கொண்டு நின்றது
வீழ்ச்சி யின்றி சூழ்ச்சியின்றி
வெற்றி பல கண்டது
கத்தி யின்றி விடுதலையை
பெற்ற வொன்றை போற்றுவோம்
யுத்த மின்றி அமைதியுடன்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்
எட்டுத்திக்கும் எழுந்து நிற்கும்
தேர்ந் தெடுத்த மந்திரம்
ஏழைக்குரலும் ஏற்றம் காணும்
காந்தியத்தில் சாத்தியம்...
எங்களில் ஒருவனே
இனிமையின் உருவமே
அனைவரும் பயன் பெரும்
அழகிய வகையினில்
வியப்புடன் வெளிப்படும் (உன்)
திறமைகள் கண்டு
கருத்துடன் நானும்
எழுதிட விழைந்தேன்
வருணிக்க வார்த்தைகள்
எடுத்திடும் நிமிடத்தில்
பிறிதொரு சாதனை
இயற்றிடும் நண்பனே
வாழ்த்துகள் உனக்கு
வாழ்வினில் மேம்பட..............
நினைவினில் வாழ்ந்திட நினைக்கின்றேன்
உன் நினைவுகளாலே இறக்கின்றேன்
நினைத்ததும் என்னிடம் இருப்பது போல் -வரும்
நினைவினை அழித்திட நினைக்கின்றேன்
நானுன்னை நினைத்திங்கு இருப்பது போல்
நீஎன்னை நினைப்பதாய் நினைக்கின்றேன்
காதலின் வலிகளை மறப்பதற்கு
பல வழிகளை தேடிட நினைக்கின்றேன்
நினைத்திடும் யாவையும் நடந்திடவே
கடவுளயும் நெஞ்சில் நினைக்கின்றேன்
கலை முகம் அவளது நினைவினிலே
அனைத்தயும் மறந்து நான் அழுகின்றேன்