ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-May-2015 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 0 |
அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !
சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!
-அரங்க ஸ்ரீஜா
நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை
விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்
கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .
விலைக்கு மேல் விலை விற்றாலும்
மனிதனின் விலை என்ன ?
உயிர் விட்டு விட்டால் !
உடல் சுட்டு விட்டால் !
ஒருவரின் இறப்புக்குப் பின்
அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை !
எனவே வாழும் போதும் சரி!
வாழ்வு முடிந்த பிறகும் சரி !
நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில்
நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .
" மனிதன் தெய்வ சாயலில்
தெய்வ சக்தியுடன்
தெய்வ சாரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் "
அப்படி இருக்க, வாழ்கின்ற மனித உயிர்களை வாட விடலாமா ?
அது தெய்வத்தை வாட விட்டதற்குச் சமம் அல்லவா ?
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வடினாரே !
அருட்பிரகாசர் ஏன் தெரியுமா ?
பரந்த உள்ளமே பரம்ப
வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !
இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்
பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்
மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே
- அரங்க ஸ்ரீஜா