இசை

வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !

இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்

பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்

மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே

- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (2-Jun-15, 10:45 am)
Tanglish : isai
பார்வை : 1373

மேலே