குருவிற்கு அர்ப்பணம்

அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !

சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!


-அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (4-Jun-15, 2:38 pm)
பார்வை : 9572

மேலே