விஜிவிஜயன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விஜிவிஜயன்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  07-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Jan-2017
பார்த்தவர்கள்:  293
புள்ளி:  41

என் படைப்புகள்
விஜிவிஜயன் செய்திகள்
விஜிவிஜயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2022 2:01 pm

நான் எனும் இப்பிறவி
எத்தனை துன்பங்களை கடந்த போதிலும்
ஓய்ந்து போகாமல்
எதிர்வரும் சோதனைகளையும் ஏற்றுக்கொண்டு
எந்தவித களிப்பும் இல்லாமல்
கண்ணீரும் இல்லாமல்
ஒருவித அமைதியை தழுவும் இந்த மனமோ
கலங்க நேரமில்லாமல்
கடந்து கொண்டே போகிறது
ஒவ்வொரு நாட்களையும்

மேலும்

விஜிவிஜயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2022 2:24 pm

உடன் பிறக்கவில்லை
நீ என் உறவும் இல்லை
ஆயினும்
என் புன்னகையின் வெளிச்சமாய்
கண்ணீரின் கைகுட்டையாய்
என்றும் என்னுடனே
பயணித்தாய்
துணை யாரும் இல்லாத போதிலும்
ஒருநாளும் கலங்காது நின்றேன்
என் தோழன் வருவான் என்று

மேலும்

விஜிவிஜயன் - விஜிவிஜயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2022 2:20 pm

முதல் முறை எழுதுகிறேன்
பிழை இருந்தால் மன்னித்துவிடு

அன்பே............
என தொடங்கும் முன்னரே
என் சிந்தனை எங்கோ சென்று விட்டது

கூடி பேச நேரம் ஒதுக்கவில்லை

தூது செல்ல நண்பர்களின்
துணையும் இல்லை

கைபேசியில் புகைப்படத்தை
பகிர்ந்து கொண்டு இரவு பகலாய்
உரையாடிக்கொள்ளவும்
விருப்பமில்லை

என்றோ ஓர் நாள் சந்தித்தாலும்
இடையில் காத்திருப்பதும்
சுகம் தான்

பிரிந்திருக்கும் வேளையிலே
வெள்ளை காகிதத்தை
நேசிக்க கற்று கொண்டேன்

சில மை துளிகளை கொண்டு
எழுத தொடங்கினேன்

பல முறை
கசக்கி கிழித்தெரிந்த பின்பும்
இறுதியில்

இதய துடிப்பின் உதவியுடன்
ஓர் கடிதம் எழுதி

மேலும்

விஜிவிஜயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2022 2:20 pm

முதல் முறை எழுதுகிறேன்
பிழை இருந்தால் மன்னித்துவிடு

அன்பே............
என தொடங்கும் முன்னரே
என் சிந்தனை எங்கோ சென்று விட்டது

கூடி பேச நேரம் ஒதுக்கவில்லை

தூது செல்ல நண்பர்களின்
துணையும் இல்லை

கைபேசியில் புகைப்படத்தை
பகிர்ந்து கொண்டு இரவு பகலாய்
உரையாடிக்கொள்ளவும்
விருப்பமில்லை

என்றோ ஓர் நாள் சந்தித்தாலும்
இடையில் காத்திருப்பதும்
சுகம் தான்

பிரிந்திருக்கும் வேளையிலே
வெள்ளை காகிதத்தை
நேசிக்க கற்று கொண்டேன்

சில மை துளிகளை கொண்டு
எழுத தொடங்கினேன்

பல முறை
கசக்கி கிழித்தெரிந்த பின்பும்
இறுதியில்

இதய துடிப்பின் உதவியுடன்
ஓர் கடிதம் எழுதி

மேலும்

விஜிவிஜயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2022 7:33 pm

தனிமையின்
வெறுமையை போக்கிட

இசையை கேட்ட
போதெல்லாம்

எங்கோ
கேட்ட வரிகள்

நினைவிருக்கிறதா
உனக்கு

நீயும் நானும் பயணிக்கும்
போது சேர்ந்து ரசித்த
பாடல்கள் அவை

சிறு புன்னகையோடு
உதடுகளோ
முணுமுணுக்க

தனிமை மட்டும்
அகலவில்லை

பிரிவின் தாக்கம் தான்
அதிகரித்தது

விழியோரம் வழியும்
ஒரு துளி
கண்ணீர் போதும்

கடந்த காலம்
முழுவதையும்
மீட்டெடுத்து

நிகழ்காலத்தை
மறப்பதற்கு

மேலும்

விஜிவிஜயன் - விஜிவிஜயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2021 11:54 am

கதை பேசிய காலங்களையெல்லம்
கவிதை வரிகளாய்
காகிதத்தில் அடைத்து விட்டேன்
திறந்து பார்த்து
நினைவுபடுத்தி கொள்வதற்கு அல்ல
நினைவுகளில்
தினம் தினம் வந்து போகும் உனக்கு
ஓய்வு அளிப்பதற்கு.........

மேலும்

விஜிவிஜயன் - விஜிவிஜயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2021 5:25 pm

எனக்கான என் நிமிடங்கள்
என் அனுமதியின்றி
உன் நினைவுகளை நினைத்து
நகர்கின்றன....

மேலும்

விஜிவிஜயன் - விஜிவிஜயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2017 7:42 pm

துளித்துளியாய் சேகரித்த
உன் நினைவுகளை
ஒரு நொடியில்
உடைத்து விட்டுச் சென்றவளே
உடைந்த
ஒவ்வொரு துண்டுகளும்
உன்னையே நினைக்குதடி
என் உயிரே.........................

மேலும்

சுமையான நினைவுகளும் மனதுக்கு சுகமாகும்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Mar-2017 8:30 am
நினைவுகளுடன் உயிர் வாழும் விதம் அழகிய வண்ணமாக உள்ளது! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 05-Mar-2017 8:39 pm
விஜிவிஜயன் - விஜிவிஜயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 8:32 pm

விழுந்த உடனே
விளைந்து விட்டேனடி
உன் விழிச்சாரலில்...........

கோடை வெயிலிலும்
குளிர்கிறேனடி
உன் கொஞ்சிப் பேசும்
விழிகளால்...........

இரு விழிக்கு மத்தியிலே
நிலவை சூட்டியவளே......

என் இதயக் கூட்டினிலே
உன் விழிகளை குடியேற
வைத்து விட்டு
நீ மட்டும் விலகி நிற்காதே..........

மேலும்

நன்றி....... 24-Mar-2017 7:59 pm
விழிகளின் தாக்குதலில் உள்ளங்கள் உதைபடுகிறது 24-Mar-2017 10:56 am
விழி வழியின் கவிதை அழகிய வண்ணமாக உள்ளது! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Mar-2017 8:47 pm
விஜிவிஜயன் - nithinm222 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2017 7:49 pm

பலரின் தனிமைகளே கவிதைகளாய் மொழிபெயர்கின்றன.

மேலும்

உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Mar-2017 8:32 am
சிறப்பு.! 05-Mar-2017 8:15 pm
விஜிவிஜயன் - விஜிவிஜயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2017 11:28 am

சிப்பிக்குள் குடியிருந்த முத்தே
ஐந்திரண்டு திங்களாய்
காத்திருந்தேன்....

உன் வரவுக்காக...

நானும் புதிதாய் பிறந்தேனடி
உன்னை கைகளில்
ஏந்தும்போது....

தந்தையின் தாயுணர்வை
உணர்கிறேன்
என் மார்போடு
துயில் கொண்ட போது...

பூமியில் பூத்த புதுமலரே
என் மடியில் தவழும்
உயிர் ஓவியம் நீ...

முழுநிலவாய் தோன்றிய
உன்னை
முதல் முறையாக
முத்தமிடுகிறேன்...

மேலும்

நன்றி தோழா...தங்கள் கருத்தில் மனம் மகிழ்ந்தேன்... 26-Feb-2017 12:28 pm
அழகிய வரிகள் மேலும் தொடருங்கள்! வாழ்த்துக்கள்! 26-Feb-2017 11:56 am
மேலும்...
கருத்துகள்

மேலே