கவிதைகள் Repaird - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கவிதைகள் Repaird |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 4 |
வான்பார்க்க முகில்பார்க்க இந்திர
வில்பார்க்க நீராட நீ பொய்கையில்
வீண்காணா முகில்காணா பேரழகி
உனைப்பார்த்து விழி மூடும் இவையாவையும்
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இதுபோல கொடி ஒன்றை
இதுவரையில் கண்டதில்லை
எனப்பாடி தான் களிக்கும் . . .
வான்பார்க்க முகில்பார்க்க இந்திர
வில்பார்க்க நீராட நீ பொய்கையில்
வீண்காணா முகில்காணா பேரழகி
உனைப்பார்த்து விழி மூடும் இவையாவையும்
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இதுபோல கொடி ஒன்றை
இதுவரையில் கண்டதில்லை
எனப்பாடி தான் களிக்கும் . . .
" புல் " லின் புலம்பல்
***********************************
புல்லென்று எனைச் சொல்வார் மண்மேல் ! எப்பொருளால்
புல்லாய் உருவானேன் என்றறியேன் ! என்மேல்
சில்லென்ற காற்றலைந்தும் சீறிவிழும் மழைகனத்தும்
சுள்ளென்ற வெயில்வருத்தும் தண்ணென்று பனி அணைக்கும்
என்செய்வேன் ஏற்கத்தான் வேண்டும் எனது நிலை !
என்செய்து அதைமாற்ற எனக்காகும் சொல்வீரே
என்னுடலில் புழுவூர்ந்து மெல்லவரும் ; பூச்சியெனைத்
தின்னவரும் ; பொன்வண்டும் உண்ணவரும் என்செய்வேன் ?
நான்பிறந்து என்னபயன்? நானிருந்து என்னபயன் ?
மண்ணுக்குப் பாரமாய் இல்லாது ம
பிரிவு
நித்திரை கண்ணின்றி
சித்திரை நிலவொளியில்
காற்றில்லா இரவுதனை
நேற்றலோ கண்டேன் நான் . . .
உன் பிரிவால்,
பிரிவு என்றும் இருமுனைக்கூர்வாள்
நம்மில்,
எவர் முதலெடுப்பினும்
இருவரும் துடிப்போம்
ஒரு முழு நாளில்
இரு வேறு பிரிவானோம்
இயற்கையின் ஆணை(சை)ப்படி
இரவு பகலானோம் . . .
பூவுடன் சேர்ந்திட்டால்
நாறும் மணக்குமடா
பூவையை நீ பிரிந்திட்டால்
தேன் சுவை கசக்குமடா
போர்வையும் கணக்குதடா - உன்
பார்வையின் பிரிவினிலே
மெய் தீண்டியும் எரிக்குதடா - உன்
நூலிழைப் பிரிவினிலே
வண்டு துளைக்குதடா
குரு மூங்கில் என் நெஞ்சுக்குள்ளே
வந்து சேர்ந்திடு நீ தென்றல் போல் (லவே)
பிரிவு
நித்திரை கண்ணின்றி
சித்திரை நிலவொளியில்
காற்றில்லா இரவுதனை
நேற்றலோ கண்டேன் நான் . . .
உன் பிரிவால்,
பிரிவு என்றும் இருமுனைக்கூர்வாள்
நம்மில்,
எவர் முதலெடுப்பினும்
இருவரும் துடிப்போம்
ஒரு முழு நாளில்
இரு வேறு பிரிவானோம்
இயற்கையின் ஆணை(சை)ப்படி
இரவு பகலானோம் . . .
பூவுடன் சேர்ந்திட்டால்
நாறும் மணக்குமடா
பூவையை நீ பிரிந்திட்டால்
தேன் சுவை கசக்குமடா
போர்வையும் கணக்குதடா - உன்
பார்வையின் பிரிவினிலே
மெய் தீண்டியும் எரிக்குதடா - உன்
நூலிழைப் பிரிவினிலே
வண்டு துளைக்குதடா
குரு மூங்கில் என் நெஞ்சுக்குள்ளே
வந்து சேர்ந்திடு நீ தென்றல் போல் (லவே)
கிறுக்கன் என்றாய் கிறுக்கினேன்
உன்னைப் பற்றி கவிதைகளாய்.
என் பிள்ளை என்னிடம்
கேட்ட ஒரு கேள்விக்கு
விடையறியா மந்தன் போல்
மாறி நான் நடந்திருந்தேன் . . .
அந்தக் கேள்விதனை
உனைப்பார்த்து நான் கேட்பேன்
உன் பிள்ளை உனைப்பார்த்து
உரைத்ததா என்று சொல் . . .
எந்தையே. . . !
பொய் என்றால் என்ன. . . ?
நீங்கள் பொய் (உரை) உரைத்ததுண்டா (டோ) . . . ?
பொய்யுரைக்க இயலாமல்
ஆமெனவும் முடியாமல்
வெயில்பட்ட (வெயிலிலிட்ட) மண்புழுவாய்
நாணிக் குணிகின்றேன் . . .
விதி நடத்தும் நாடகத்தில்
என் வித்தே எனது விடை
நானறியா பலவிடையை
கேள்வியாய் எனக்குரைத்து
என் வழியே உன்னை நீ
சிலையெனவே செதுக்கிட்டாய் . . .
நீ தொடுத்த கேள்விக்கு
இதுவே எனது விடை
ஆமென்
என் பிள்ளை என்னிடம்
கேட்ட ஒரு கேள்விக்கு
விடையறியா மந்தன் போல்
மாறி நான் நடந்திருந்தேன் . . .
அந்தக் கேள்விதனை
உனைப்பார்த்து நான் கேட்பேன்
உன் பிள்ளை உனைப்பார்த்து
உரைத்ததா என்று சொல் . . .
எந்தையே. . . !
பொய் என்றால் என்ன. . . ?
நீங்கள் பொய் (உரை) உரைத்ததுண்டா (டோ) . . . ?
பொய்யுரைக்க இயலாமல்
ஆமெனவும் முடியாமல்
வெயில்பட்ட (வெயிலிலிட்ட) மண்புழுவாய்
நாணிக் குணிகின்றேன் . . .
விதி நடத்தும் நாடகத்தில்
என் வித்தே எனது விடை
நானறியா பலவிடையை
கேள்வியாய் எனக்குரைத்து
என் வழியே உன்னை நீ
சிலையெனவே செதுக்கிட்டாய் . . .
நீ தொடுத்த கேள்விக்கு
இதுவே எனது விடை
ஆமென்