பிரிவு

பிரிவு

நித்திரை கண்ணின்றி
சித்திரை நிலவொளியில்
காற்றில்லா இரவுதனை
நேற்றலோ கண்டேன் நான் . . .

உன் பிரிவால்,

பிரிவு என்றும் இருமுனைக்கூர்வாள்
நம்மில்,
எவர் முதலெடுப்பினும்
இருவரும் துடிப்போம்

ஒரு முழு நாளில்
இரு வேறு பிரிவானோம்
இயற்கையின் ஆணை(சை)ப்படி
இரவு பகலானோம் . . .

பூவுடன் சேர்ந்திட்டால்
நாறும் மணக்குமடா
பூவையை நீ பிரிந்திட்டால்
தேன் சுவை கசக்குமடா

போர்வையும் கணக்குதடா - உன்
பார்வையின் பிரிவினிலே
மெய் தீண்டியும் எரிக்குதடா - உன்
நூலிழைப் பிரிவினிலே

வண்டு துளைக்குதடா
குரு மூங்கில் என் நெஞ்சுக்குள்ளே
வந்து சேர்ந்திடு நீ தென்றல் போல் (லவே)
நான் இசைத்திட காத்திருப்பேன்

எழுதியவர் : மோகன் (5-Oct-18, 10:20 am)
சேர்த்தது : கவிதைகள் Repaird
Tanglish : pirivu
பார்வை : 140

மேலே