நான் அமைப்பியல் துறையில் பட்டயம் பெற்றுள்ளேன் . நான் தற்போது வாணியம்பாடி நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக பணி ஆற்றி வருகிறேன் . தமிழில் எனக்கு ஆர்வம் உண்டு . ஆனால் பணியின் காரணத்தினால் தமிழ் துறையில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனது . இப்போது இந்த வெப் சைட்டில் இணைய வாய்ப்பு கிடைத்தது . மிக்க மகிழ்ச்சி .
இரு மனங்களை ஒன்றாக்கிய பந்தம்
இரு திசையில் பிரித்துவிட
கடந்த காலத்தின் நினைவுப் பத்திரமாய்
நிகழ்காலத்தின் துயரமாய்
எதிர் காலத்தின் வினாக்குறியாய்
சட்டம் தீர்ப்பெழுதிய சான்றிதழ்
விவாகரத்து.
இனிய கனவுகள் இரவதினில் காண
வண்ண வாழ்த்துக்களை வரிந்துதான் கூறியே
பண்ணிய நாட்கள் பறந்துதான் போச்சே
உறவுகள் இல்லை உறுதியாய் தெரிந்தது
பின்னே ஏதோ பிணைப்புகள் உள்ளதாய்
மறை பொருள் வார்த்தைகள் மறைந்துதான் போச்சே
தேடாத வார்த்தைகள் தானாகத்தான் வந்து
உறக்கத்தை தான் கெடுத்து கனவுகளை பறித்து எடுத்து
தினம் தினம் காணாமல் போய்க்கொண்டிருக்கும்
என் கனவு தேவதையே
கனவுகள் காண கண்ணுறக்கம் வந்தால் தானே
காலங்கள் கூறட்டும் எட்டா நிலையினிலே
ஏன் வந்தாய் நீ என்று
வெட்ட வெளிச்சமாய் உண்மை இதுவென்று
பட்டறிவு பகர்ந்தாலும் பாழும் மனமது
பரிதவிப்பு கொள்ளுதே
கானல் நீர் காட்சி இவை
பகல் கனவு காலம்
உங்கள் பதிவேற்றம் பற்றிய கேள்விக்கு பதில் எழுதுவதாக இருந்தேன்
கவிதை பதிவேற்றி விட்டீர்கள். இனி சொல்லத்தேவையில்லை .
ஷண்முகம் நின் கவிமுகம் கண்டு
என் மனம் மலர்ந்தது ஆறுமுகத்து அய்யா !
ஒரு வரியாயினும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள் .
வானில் தொடங்கி வானில் முடித்திருப்பது அழகு .
நீங்கள் யாப்பில் எழுதலாம்
வானெனும் தாய்வை யகக்குழந் தைக்கு
வழங்கும்தாய்ப் பால்வான் துளி
----உங்கள் வரி அப்படியே குறள் வெண்பாவாக.
வாழ்த்துக்கள் . 13-Mar-2018 8:22 am
உங்கள் பதிவேற்றம் பற்றிய கேள்விக்கு பதில் எழுதுவதாக இருந்தேன்
கவிதை பதிவேற்றி விட்டீர்கள். இனி சொல்லத்தேவையில்லை .
ஷண்முகம் நின் கவிமுகம் கண்டு
என் மனம் மலர்ந்தது ஆறுமுகத்து அய்யா !
ஒரு வரியாயினும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள் .
வானில் தொடங்கி வானில் முடித்திருப்பது அழகு .
நீங்கள் யாப்பில் எழுதலாம்
வானெனும் தாய்வை யகக்குழந் தைக்கு
வழங்கும்தாய்ப் பால்வான் துளி
----உங்கள் வரி அப்படியே குறள் வெண்பாவாக.
வாழ்த்துக்கள் . 13-Mar-2018 8:22 am