Saishree R - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Saishree R |
இடம் | : கூடுவாஞ்சேரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 19 |
பிஞ்சுக் குழந்தை
நெஞ்சு பிளக்க
விம்மி அழுதது
கொஞ்சம் பிழைக்க
வற்றிய தாய்ப்பால்
வறண்டுவிட்ட கொங்கைகள்
இரைச்சல் காதில் விழுந்திடவே
எரிச்சலும் இகழ்ச்சியுமாய்
காவல் துறையினர்
உறுத்து விழித்திடவே
தடி கொண்டு மிரட்டிடவே
பயமொன்று படர்ந்திடவே
வறுமை அனுதினம் வதைத்திடவே
கண்ணீரும் உலர்ந்திடவே
செய்வதறியாது கணவனை நோக்கிடவே
குடும்பங்கள் இல்லறம் நடத்தியதே
சாலையோரம் நடைபாதையின்
இடையிடையே ....
-Saishree.R
உலர்ந்திடும் வெற்று ஈர்ப்பு என்றென்னி
புறகணிக்கத்தான் செய்தேன்
மாறாக ஊற்றாய் உருவெடுத்து
பிரவாகமாய் பெருக்கெடுத்து
உன் நினைவாகிய. காட்டாற்று வெள்ளம் தன்
மையச் சுழலில்
சிக்கிய செரட்டையாய்
சிதறித்தான் போனேன்
அதன் தாக்கம் உணர்ந்த பொழுதில்
இன்னமும் திமிரி எழ முற்பட்ட
போது
மனமுவந்து முயற்சிதனை முற்றிலும்
கைவிட்டவளாய்
மூழ்கவே துடித்தேன்
உன் எண்ணமாகிய சமுத்திரத்தை
அடையும் ஆசைதனில்.
-Saishree.R
என் நேசமும் உன்னை தொந்தரவு
செய்யாமலிருக்க விரும்பி
தொடர்பு கொள்ளாது தவிக்கும்
என் மனம்
செய்வதறியாது உன் நினைவுகளான நிழற்குடையில்
தஞ்சமடைந்தது
உன் அழைப்பை எதிர்பார்த்து
காலத்தை வெறித்தபடி
-Saishree.R
நிலவொளியில் நிழலாட
வெட்கம் இழையோட
கவிழ்ந்திருந்த மொட்டு
மேலிருந்த பனித்துளி பட்டு
தேகம் சிலிர்த்திட்டு
சற்றே சுழல்களான
திரைச்சீலை விலக்கி விட்டு
..........முகம் காட்டினாள் மல்லி.
-SaishreeR
பாட்டில்கள் அடுக்கடுக்காய்
குவிந்தபடி
விசும்பலில் குடும்பங்கள் உருகுலைந்தபடி
உற்றார் உறவினர் இழிந்தபடி
வீதிநடையெடுத்தனர் தள்ளாடியபடி
மது குடுவையில் தஞ்சம்
கொண்டாடியபடி
மதியிழந்து மதிப்பிழந்து நலிவுற்று
வலுவிழந்து தெருமுனையில் வீழ்ந்தபடி
மக்கட்கு மனையாளும் அனுதினமும்
பதைத்துத் தேடி அலைந்தபடி
திருந்தவே கெஞ்சிடும் நெஞ்சங்கள்
தளர்வுற்றபடி
விடாத மது அரக்கன் கையமர்த்தியபடி
சொந்தங்கள் அனாதயாகி நிற்பதை வெறித்தபடி
ஏறிச்சென்றான் பாடையில் பயனித்தபடி
- Saishree. R
***************************************************************************
உண்மைதனை உரைத்திடுவாய்
உள்ளதை உள்ளபடிக் காட்டிடுவாய்
என்று நம்பித்தானே
உன் முன்னால் வந்து நின்றோம்
ஆனால்..
நீ செய்திடும் வேலைகளோ
அந்த சூனியக்காரியின்
மாயக்கண்ணாடியையும் விஞ்சி நிற்கிறதே!...
அன்பும் அழகும் அறிவும்
ஒருங்கே கொண்ட பெண்ணொருத்தி
அலங்கரித்து உன்முன் வந்தால்
அன்பையும் அறிவையும் கபளீகரம் செய்துகொண்டு
தான்தான் பேரழகு என்னும் கர்வத்தை
அவளுக்கு நீ பரிசளிக்கின்றாய்.
தகுமா இது?
சிவந்த மேனிதான் உயர்வு அழகு
என்பது போன்ற ஒரு படிமத்தை
உன்முன் நிற்போருக்குள் ஏற்படுத்திவிடுகின்றாய்..
விளைவு..
கருப்புகள