செந்தூரணி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செந்தூரணி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Jul-1982 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 14 |
நிகழ்கால நொடிகளும்
இறந்தகாலமாய்
நிகழ்கால நொடிகளும்
இறந்தகாலமாய்
உட்சபட்ச மகிழ்ச்சியை,
உயிர் உறையும் துன்பத்தை
கடந்த நிலையில்...
ஆறுதல்களையும், அங்கீகாரங்களையும்
எதிர்பாரா எல்லை தாண்டிய
உணர்வுகளில்...
காற்றின் அசைவில்
மிதந்து தரை தொடும்
காய்ந்த சருகை போன்ற
எடையற்ற ஒரு தருணத்தில்
மிதமாக ஊறத்தொடங்கும் அமைதியில்
பிறக்கிறது மொழிக்குள் அடக்க முடியாத
எனக்கான கவிதை.
உள்ளத்தின் இருளகற்ற ஒளிச்சுடராய் வந்தாய்!
உணர்வற்று இருந்தேன் உயிரூட்டினாய்!
தீப திருச்சுடரை இருகரம் இருத்தி இமைக்க மறந்த மறுநொடியில்
தீப்பந்தாய் சுழன்று இதயம் எரித்தாய்!
நாவினால் ஒருமுறையே சுட்டாய்
நினைவினால் மீண்டும் மீண்டும் சுட்டுக்கொ(ல்)ள்கிறேன் நான்!
என்
உறைநிலையையும்
உருகுநிலையையும்
உணர்ந்தவள் நீ மட்டுமே
என்பதை
உணராததேன்?
உட்சபட்ச மகிழ்ச்சியை,
உயிர் உறையும் துன்பத்தை
கடந்த நிலையில்...
ஆறுதல்களையும், அங்கீகாரங்களையும்
எதிர்பாரா எல்லை தாண்டிய
உணர்வுகளில்...
காற்றின் அசைவில்
மிதந்து தரை தொடும்
காய்ந்த சருகை போன்ற
எடையற்ற ஒரு தருணத்தில்
மிதமாக ஊறத்தொடங்கும் அமைதியில்
பிறக்கிறது மொழிக்குள் அடக்க முடியாத
எனக்கான கவிதை.
இழை இழையாய் கோடி பட்டுநூல் கற்றை - பின்னல்
ஒற்றை பிறை ஏங்கும் - நெற்றி
வில்லென இரு புருவ
நாணேற்றி
ஒளி உமிழ அம்பெய்யும்
விழியிரண்டை குளிர்விக்கும்
கண்ணிமைகள் - தானியங்கி சாமரங்கள்
மலர்முகத்தை சமச்சீராய் பகுக்கும்
மங்கலநாசி வீசியெறியும்
கரிவளியும் (CO2)
உயிர்வளி ஆகி (O2)
உயிர்வலி நீக்கும்
எனக்கு மட்டும்
செம்மையும் நாணும்
அதரம் கண்டு
வெண்மையும் வெட்கும்
நற்பல் வரிசை கண்டு
தட்ப வெப்பம்
தடுமாறி
காதல் நட்டத்திலுள்ள
எனக்கு
தனமாய்
அட்டத்திலொரு லட்சுமியாய்
என் தனலட்சுமி.
உன் கண்களில்
காதல் கேட்டால்
என் கண்களில்
கண்ணீர் தருவாய்
வழி கேட்டால்
வலி தரும் வகை(த)யறிவாய்
"கொட்டும் மழை வேண்டாம்
சன்னல் வழி சிதறும்
சாரல் தா "
என்று நீ கேட்கும் நாளில்...
மேகமற்றிருக்கும் என் வானம்
நாளெனும் கண்ணாடிச் சிதறல்கள்
நொடிகளாய்...
நொடிதோறும் என் பிம்பம் என
ஆயிரமாயிரம் (86,400) நான்- உன்
நாள்தோறும் நிறைந்திருக்கிறேன்.
ஒரு நாளெனும்
முழுவடிவ கண்ணாடியில்
விஸ்வரூப
ஒற்றை பிம்பமாய்
என் நாளெங்கும் நிறை(லை)ந்(த்)திருக்கிறாய் -நீ
உன் ஒவ்வொரு செல்லும் நான்!
என் முழுமையும் நீ!
இதை எப்படி புரியவைப்பேன் உனக்கு?!
வானம் பார்த்த
பூமியாய்
உன்னை நோக்கி நான்...
மேகமில்லா
உன் பார்வைகள்
சுட்டதில்...
எஞ்சியிருந்த உயி(நீ)ரும்
வெற்றியதில் - என்
விழியிரண்டில்
மேகமென திரண்டு
கொட்டும்
மழைக்கண்ணீர்
ஈ(நீ)ர(ம)ற்ற உன் வா(ம)னத்தை
நனைக்காதோ