saranyasridharan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  saranyasridharan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Apr-2017
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  1

என் படைப்புகள்
saranyasridharan செய்திகள்
saranyasridharan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2017 9:02 pm

வானவெளியில் மிடுக்கு
நடையில் வலம் வருவாய்,
கணக்கில்லா கண்கள்
உன் தோற்றத்தை ரசித்திட,
வளர் பிறையாயினும்
தேய் பிறையாயினும்
மனம் தளராது ரம்யமாய் காட்சியளிப்பாய்,
எல்லாரையும் பெரிய கனவுகள்
காணத் தூண்டுவாய்,
எத்தனைக் கஷ்டங்கள் இருப்பினும்
உன் துணையால் மன அமைதி தருவாய்,
எண்ணற்ற நட்சத்திர கோபியர் நடுவே
செல்லக் கண்ணனாய் சுற்றி திருவாய் !

மேலும்

எளிய சொற்களின் இனிமை அழகு 04-Aug-2017 8:23 am
saranyasridharan - எண்ணம் (public)
08-Jun-2017 3:39 pm

  தேடல் 
எல்லாம் உள்ள பணக்காரனின் தேடல் 
மனநிம்மதிக்காக 
அனைத்தையும் துறந்த ஞானியின் தேடல் 
முக்திக்காக 
எளிய ஏழையின் தேடல் 
ஒரு வேலை உணவிற்காக 
அரசியல்வாதியின் தேடல் 
மேலும் உயர்ந்த பதவிக்காக 
கூண்டிலிருக்கும் பறவையின் தேடல் 
எல்லையில்லா வானத்திற்காக 
பாயும் புலியின் 
தேடல் இரைக்காக 
துள்ளித் தப்பிக்கும் மானின் 
தேடல் வாழ்விற்காக 
மீனவனின் வலையிலிருந்து தப்பிக்க மீனின் 
தேடல் அதிர்ஷ்டத்திற்காக 
தேவைகள் பலவாயினும் 
தேடல்கள் ஒன்றே 
இல்லாத ஒன்றைத் தேடித்தேடி 
நம் வாழ்க்கை நகர்கின்றதே!!!  

மேலும்

saranyasridharan - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
saranyasridharan - எண்ணம் (public)
27-Apr-2017 9:10 pm

அடுத்த தலைமுறையின்சமுதாய சீரழிவின் தொடக்கம்,

கோவிலின் கட்டண வரிசையில்
 நாம் கற்பிக்கும் குறுக்குவழியால்!

மேலும்

saranyasridharan - எண்ணம் (public)
27-Apr-2017 8:55 pm

 நம்பிக்கையின்மை

==========================
 
அவனை ஓர் காரிருள்நிழலாய் தொடர்ந்தது,
இன்னும் வாட்டிட,
நம்பிக்கையின்மையாய்.  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே