எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது...

*சிந்தனைக்காக சில குறிப்புகள்.*

->பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள்,
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

->சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

-> நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்!

-> நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

->நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

-> நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்

குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

-> வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

->சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

->முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

->ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

-> எல்லோரையும் நேசிப்பது சிரமம்.ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

-> நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

-> காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

->இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்.

->யார் சொல்வது சரி என்பதல்ல,எது சரி என்பதே முக்கியம்.

->ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

-> பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

->நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

->உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

-> உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

->வாழ்வதும் வாழவிடுவதும்
நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

->தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

->உலகம் ஒரு நாடக மேடை அதில் நான் ஒரு நடிகன் நீ ஒரு நடிகன்.

-> செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்.

->அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

->வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்...
-> தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

-> பிறர் நம்மைச் சமாதானப் படுத்த வேண்டும்என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

-> கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

->ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

-> சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

-> ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*

*படியுங்கள்... பகிருங்கள்...*

மேலும்

நன்றி தோழரே! 28-Dec-2016 2:28 pm
புரிந்து கொண்டு புரிய வைக்க முயற்சித்தமைக்கு வாழ்த்துக்கள். 28-Dec-2016 1:12 pm
மிக்க நன்றி 24-Dec-2016 10:48 am
மிகச்சிறப்பு - மு.ரா. 24-Dec-2016 3:29 am

வர்தானு ஒண்ணு வரும்னு சொன்னாங்க!! ஆனா இப்புடி வருமுன்னு தெரியாம போச்சே... தெரிஞ்சிருந்தா "வருமுன் காத்துருக்கலாமே"..!
சென்னை வாசிகளே! கவனம்!!!
திடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்...!!

மேலும்


மேலே