சிவகாவிய தாசன்- கருத்துகள்
சிவகாவிய தாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [63]
- Dr.V.K.Kanniappan [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [19]
- hanisfathima [18]
திருவிழா குழுவிற்கும் தங்களுக்கு கொடுத்த பொறுப்புகளில் இருந்து சிரமம் பாராமல் செயல்பட்ட நடுவர்களுக்கும் இக்கவிதை போட்டியை மிக சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய திரு நிலா சூரியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..என்னுடைய கவிதைக்கு பரிசு கிடைத்ததில் மெத்த மகிழ்ச்சி
வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றிகள் பல .....
தமிழனென்றால் உரைக்கணும் புத்தி(பொங்கல் கவிதை போட்டி )
ஆதியில் தோன்றி அகிலத்தை ஊன்றி
நீதியில் வாழ்ந்த நீதாண்டாத் தமிழன்,
பாதியில் வந்த பகடையர்க்குரிமை
பகிர்ந்தளித்தாயே அதில் நீ வழுக்கன்!
பாரினிலெவனும் பரிதவித்தாலும்
முதற்கண் சிந்திடும் மூத்தவன் தமிழன்,
ஆரிறுகோடி சிதைந்ததனாலே
அடிமையான அவலன் தமிழன்!
நாகரிகத்தை உலகிற்களித்தாய்
நல்லறிவினையே குறளில் உதிர்த்தாய்,
வீரக்காவியம் நீயும் படைத்தாய்
செம்மொழி இலக்கணம் நயமாய் வடித்தாய்!
மண்ணை உழுது விதையை விதைத்தாய்
மனதை உழுது மனிதம் விதைத்தாய்,
ஏட்டை உழுது பாட்டை விதைத்தாய்
எதிரியை உழுது வெற்றிகள் படைத்தாய்!
அகிலம் போற்ற வாழ்ந்த தமிழன்
ஒற்றுமையற்று உடைந்ததனாலே
மூத்தகுடியோ தாழ்ந்தது இன்று
முகவரிகூட தொலைந்தது இழுக்கு!
தமிழ்த்தாய் என்றால் பிறக்கணும் பக்தி
தமிழனென்றால் உரைக்கணும் புத்தி
உலகை ஆள இருக்குது சக்தி
ஒன்றாய் வாழ்ந்து அடைந்திடு முக்தி!
மிக்க நன்றி ......