தினேஸ்குமார் இரா- கருத்துகள்

விளக்கம்:
அவள் கண்களை சந்திக்காமல் போனதனால்
அவன் சில நாட்கள் ஏக்கத்தோடு அவளை சந்திக்க செல்கிறான்..
அவளிடம் கூறாத வார்த்தையான 'காதல்' என்ற ஒற்றை வார்த்தையினை அவளிடம் சொல்வதற்காக...

அவன் வாங்கி வைத்த காதல் பரிசுகளை எடுத்து கொண்டு..
அவள் வரும் வழிபார்த்து அவர்கள் முதலில் சந்தித்த
ஒரு மரத்தடியில் அமர்கிறான்..
அந்த மரமோ அவள் இல்லாமல
சிறுதும் அசையாமல் காற்றை தூவாமல் நிற்கிறது..
அவனோ அவளை பார்த்த காலங்களை எல்லாம் தன் கண்களுக்கள் கொண்டு வருகிறான்..
அவளிடம் நண்பனாக பேசி சிரித்த காலங்களை காயங்களாக.. அந்த வேளை அவன் அருகில் அவனுக்கு தெரியாத சில நண்பர்கள் விளையாடிகொண்டிருக்கின்றன...

அவள் வரும் வரை காத்திருக்கிறான்...
நேரம் கடக்கிறது.. ..

பிறகு கையில் அவளுக்காக வைத்திருந்த காகிதத்தில் காதல் கடிதம் தீட்டுகிறான்...

அவனுக்கு கவிதை எழுத வரவில்லை என்றாலும் தமிழ் வார்த்தைகளை மாறி மாறி எழுதி பார்த்து சேராத வார்த்தைகளை எல்லாம் சேர்த்து

யாரும் எழுதாத கவிதை ஒன்றை எழுதி கொண்டே இருக்கிறான் அவளால்...

அவள் வரும் வரை அவளுக்கான கவிதை தொடரும் அவனது பேனா முனையில்.......✍️

அவளை தினமும் ஒருதலையாக நேசித்த அவன்
கல்லூரி முடிந்ததும்
சில நாட்கள் கழித்து எங்கு சென்றாள் என்பது தெரியாமல் அவளிடம் சொல்லாத காதலினை சொல்வதற்காக அவளை முதல்முறை சந்தித்த இடத்திற்கே செல்கிறான்..... அப்படி செல்லும்போது அவன் எண்ணங்களை கற்பணையாக எழுதிப் பார்த்தேன்... தோழரே...

('விளக்கம்' மேலே தனியான கருத்துப்பட்டியலில்.....)

நன்றிகள் தோழரே..


தினேஸ்குமார் இரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே