DivyaPrakash56- கருத்துகள்

இந்த போட்டியின் முடிவுகளுக்கு காத்திருக்கிறேன் .

அழகிய ஊற்றென மண்ணிலே
தோன்றி தவழ்ந்தால் பதுமையே !!

ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து
மண்ணை நோக்கி வருகையில்
வளர்ச்சி கொண்ட கன்னியாய்
கண் கவர்ந்தாள் நதி அவளே !!!

அவளின் வளர்ச்சி வேகத்தில்
பலர் தாகம் தீர்ந்தும் போனதே ,
தாங்கி நின்ற மண் அனைத்தும்
வளமும் பெற்று சிறந்ததே !!

தனக்கொரு துணையொன்று
வேண்டும் என்ற தவிப்போடு
பல மயில் கடந்தபின்னே
சமுத்திரன் அவனை கண்டாலே !!
இனிமை தன்னில் சேர்த்திட
தன்னை விட பெரியவன் இவன் தானே சிறந்தவன்
என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !!

அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே !
அவளின் இனிமையோ மாறியதே !!!
அவள் பெருமை கேட்க செவியும் இல்லை ,
குணத்தை காட்ட இடமும் இல்லை !!

கடலில் சென்று கலந்தபின்னே
கவலைப்பட்டு என்ன பயன் ?
மீண்டும் விலகி சென்றாலும்
அவளின் சுவையும் கிடைத்திடுமோ ?

அனுசரித்து வாழ்வதே பெண்ணின்
குணமாய் ஆனதே !!!!

தீமைகள் உலகம் தோன்றியது முதல் இன்று வரை மனிதனை அச்சுறுத்தி கொண்டு தான் இருக்கிறது .
இவை மனிதன் எதிர் கொள்ளும் சவால்களை காட்டுகிறது . போராடும் மன பாங்கை வளர்த்து மனதின் வலிமை கூட்ட தீய சக்திகளை இறைவன் வளர செய்து பின்னர் அதனை அழிக்கிறார் .இதனை மனிதன் மறந்திடாமல் அவன் வாழ்வில் தடம் மாறாமல் பயணிக்கவே இத்தகைய ஸம்ஹர நிகழ்வுகள் நடத்த படுகின்றன .


DivyaPrakash56 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே