ரூபி- கருத்துகள்

அன்பு தோழி,
உங்களின் மனநிலை எனக்கும் பல சமயங்களில் இருந்து உள்ளது...
இதற்கான தீர்வு உங்களை நீங்களே ஆராய்வதில் மூலம் கிடைக்கும்...
தன்னிலை அறிதலை விட சிறந்த தீர்வு ஏதும் இல்லை...
உங்களின் மனதின் குணாதிசியங்களை பட்டியலிட்டு ஆராயுங்கள்...
தீர்வு நிச்சயம் கிட்டும்...
நம் மனதின் குழப்பத்தை நம்மால் மட்டுமே தீர்க்க இயலும்...
இது எனது அனுபவத்தின் மூலம் நான் கண்ட தீர்வு...
உங்கள் குழப்பங்கள் தீர பிராத்திக்கிறேன்...

கற்பு என்பது இருபாலுக்கும் சமம் என்பது அனைவரும் ஏனோ ஏற்பதில்லை... ஒரு பெண் எது செய்தாலும் அது சமூகத்தில் ஒரு பூதக்கண்ணாடி மூலமாகவே பார்க்கப்படுகிறது... சமூகம் என்பது வேற்று கிரக மனிதர்கள் அல்ல... நாம் அனைவரும் சேர்ந்ததே சமூகம்... ஒரு வீட்டில் ஒரு ஆண் தனது மனைவிக்கு செய்யும் துரோகம் ஏற்றுக்கொள்ளப்படும் பொது சமூகம் அதை பின்பற்ற தொடங்குகிறது... சமூகம் மாற நாம் மாறுவோம்.... கற்பு அனைவர்க்கும் சமம் என்பதை நாம் கற்போம், பின்னே சமூகத்திற்கு கற்பிப்போம்....

ஊக்குவித்தமைக்கு நன்றி தோழா


ரூபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே