p divya- கருத்துகள்

ஆசிரியர்

ஈன்றெடுக்கவில்லை கருவிலிருந்து என்னை என்றாலும் நீர்
என்னை அறிவுக் கருவினில் மூழ்கச் செய்தீர்
வலிகளைத் தாங்கி வெற்றிக்காண வழி தந்தீர்
என்றும் அயர்ச்சியில்லாமல் முயற்சி செய்ய பயிற்சிதந்தீர்
என்றும் துயரமில்லாமல் வாழ பயிற்றுவித்தீர் -நீர்
ஆசைமறந்து ஆசி வழங்கும் மெய்யான தூயவராவீர்
என்நலம் கருதி தன்னலம் பாராமல் உழைப்பவரே,
உம் இன்னல்மறந்தெமக்கு அறிவளிக்கும் நீரும் தியாகியே!
பரந்து விரிந்த பாரவர்க்கு பாடம் புகட்டும் நீர்
என்றும் என் ஆழ்மனதினில் நிலையான பரம்பொருளாய்!
-திவ்யா


p divya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே