சேர்த்தவர் : malar1991, 3-Jun-15, 6:13 pm

நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று

நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

அன்புள்ள எழுத்து.காம் கவிஞர்களே, வணக்கம்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு
“நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று”
என்று தொடங்கும் கவிதை ஒன்றை எழுதினேன். அது தொலைந்துவிட்டது. அந்த இரண்டு வரிகள் மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை. அதை மீண்டும் எழுதி முடிக்க முயன்று தோல்வியே கண்டேன். மனநிறைவில்லா அக்கவிதையை 11-அக்டோபர் 2013 அன்று (கவிதை எண் 148117). எழுத்தில் பதிவு செய்தேன். எனக்குப் பிடித்த அந்த இரண்டு வரிகளையும் தலைப்பாகக் கோண்டு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். ஒருவர் ஒரு படைப்பிற்கு மேல் அனுப்பினால் முதலில் வரும் படைப்பைத் தவிர மற்றவை நிராகரிக்கப்படும். முதல் மூன்று இடங்களைப் பெறும் கவிஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு நடுவர்களின் கருத்தும் பாராட்டும் வெளியிடப்படும். கவிதையைச் சமர்ப்பிக்கும் இறுதி நாளன்றே நடுவர் குழு அமைக்கப்படும். எனவே முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்படாது. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

அன்புடன்
malar1991

பரிசு விவரங்கள்

முதல் மூன்று நிலைகளைப் பெறும் கவிஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு நடுவர் குழுவின் பாராட்டு வெளியிடப்படும். பாராட்டுதலே பரிசாகும்.

ஆரம்ப நாள் : 10-Jun-2015
இறுதி நாள் : 20-Jun-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 30-Jun-2015

நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று போட்டி | Competition at Eluthu.com



மேலே