கொஞ்சம் மூன்றாம் பால் பக்கம் தினம் எனையணை திண்தோள்...
கொஞ்சம் மூன்றாம் பால் பக்கம்
தினம் எனையணை
திண்தோள் மணவாளன்
தீரா தேக வாசமுன்
நாறுமோ நில்லுமோ
நின்
நிலையிலா நாறுகொள்
நாற்ற மலரே !
சுசீந்திரன்.
பொருள்::தினம்தோறும் என்னை அரவணைத்து அன்புகாட்டும் என் கணவனின் என்றுமே வீசிக்கொண்டிருக்கும் தேக வாசனைக்கு முன் ஒரு சில மணி நேரங்களே வாசமுடைய மலரே நீ ஈடாக நிற்க முடியுமோ ?
நாற்றம்= மணம் , நாறு = மணக்கின்ற