எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எவரும் வாசித்து பாராட்ட வேண்டிய படைப்பு (பிரபஞ்சன் தனது...

எவரும் வாசித்து பாராட்ட வேண்டிய படைப்பு (பிரபஞ்சன் தனது ;மயிலிறகு குட்டிப் போட்டது ' எனும் நூலின் சொல்வார் -------'எப்போது தனது புத்தக பக்கங்களின் இடையில் வைத்த மயிலிறகு குட்டி போடாது என ஒரு குழந்தை தெரிந்துக் கொள்கிறதோ அப்போதுதான் அது தன் குழந்தைமையை இழக்கிறது ---' திருமூர்த்தியின் படைப்பு இலகுவான ஒரு இறகு மேலே இருந்து அனாயசமாக கீழிறங்கி விழுவதுப் போன்று தவழ்ந்து தவழ்ந்து நெஞ்சில் 'சபக் ' என்று ஒட்டிக் கொண்டது . தளத்தில் அபூர்வமான ஒரு படைப்பு இது . வாழ்த்துக்கள் தோழா தொடர்க )




நண்பர்களுக்குத்
தேய்த்துவிட்ட மப்பூடு...
*
தோட்டத்தில்
கண்டெடுத்த மயிலிறகு...
*
சில்லிமூக்கு
உடைந்து ஒழுகிய ரத்தம்...
*
இன்னமும் விலை ஏறாத
பூமர் காகிதம்...
*
அக்டோபர் இரண்டுக்காக
அன்பளிப்பாய்ப் பெற்ற
குட்டிப்புத்தகம்...
*
இதயவடிவில்
புழு கொறித்த இலை...
*
ஆசிரியர்களின்
கையெழுத்துக்கள்...
*
அரைத்துண்டான
ஐந்து ரூபாய்நோட்டு...
*
அம்மன் கோவில்த்திருநீர்...
*
நாமெல்லாம்
மதிப்பளிக்கும் தேசியக்கொடி...
*




நோட்டுப் புத்தகங்களுக்குள்
காலச்சுவடுகளாய் இருந்த
பொக்கிஷங்கள் அனைத்தும்
ஐந்தாவது
படித்து முடித்தபிறகு
எடைக்குப் போடப்பட்டதை
நினைக்கும்போதெல்லாம்
மனது
உடைந்த கிளையாய்த்
தொங்கிப்போகிறது....
==திருமூர்த்தி

பதிவு : agan
நாள் : 5-Mar-15, 5:33 pm

மேலே