எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகிழ்ச்சி பொங்கி வான் கிண்ணம் நிறைந்து சொரிந்த நீர்...

மகிழ்ச்சி பொங்கி
வான் கிண்ணம் நிறைந்து
சொரிந்த நீர் மண்ணிற்கு உயிராக
மரம் யாவும் நனைந்து சொட்டுவிட
மனம் கண்ட இனிமை மறவாமலிருக்குதே
இன்று.....................................??
சூழ்ச்சி தாக்கி
கதறி விடும் கண்ணீர் துளிகள் கூட
கண்மூடி திறக்கும் தருணமதில்
வறட்ச்சி முழுங்கி மண்ணிற்கு பயனற்று
கானலாய் மறையும் காட்சி காணுமிடம்....
என் நெஞ்சம் பொறுக்குதில்லையே
மண் கண்ட பஞ்சம் அது நாம் அண்டை
தஞ்சம் வரும் நாட்கள் கூட வெகு தூரம் இல்லையே...!!
...கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 6-Mar-15, 9:09 pm

மேலே