எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முகம் காட்டுமிடம் அழகாம் பேசுமிடம் இனிமையாம் எழுதினால் கவிதையாம்.....

முகம் காட்டுமிடம்
அழகாம்
பேசுமிடம்
இனிமையாம்
எழுதினால்
கவிதையாம்..
இவை சுமக்கும்
பொய்களை நம்பும் மக்கள் ஏனோ
உண்மையை காணுமிடம் மட்டும்
பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள்??
உணர்வுகள் கசந்து போகும் எண்ணம் வேண்டாம்
எனக்காய் இசைந்து பேசும் கூட்டம் வேண்டாம்
சீற்றம் மறைத்து சிறுத்து ஒளிரும்
சிமிழி நெருப்பு நான்...
மாற்றம் தேடி காட்டு தீயாய்
உருமாறி பதர் எரிக்கும் நாளும் வரும்...
ஊர் அடித்து உலையில் போடும் ஆளும் நானில்லை
உணர்வு கொன்று உறங்கி கிடக்க பிணமும் நானில்லை..
...கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 6-Mar-15, 9:11 pm

மேலே